அம்பாறை திருக்கோவிலில் சுவாமி விபுலானந்தர் நூலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

0
153

இந்து சமய கலாசார திணைக்களத்தினால் அம்பாறை திருக்கோவில் திருஞானவாணி அறநெறிப்பாடசாலையில் சுவாமி விபுலானந்தர் நூலகம்
திறந்து வைக்கப்பட்டுள்ளளது.
திருஞானவாணி முத்தமிழ் இசை மன்றத்தின் தலைவர் ஆ.கணேசமூர்த்தி தலைமையில் நூலக திறப்பு விழா இடம்பெற்றது.
இந்து சமய கலாசார திணைக்களத்தினால் அறநெறிப் பாடசாலை மாணவர்களின் சமய மற்றும் அறிவியல் ரீதியான வாசிப்பு மேம்பாட்டினை ஊக்குவிக்கும் நோக்கத்துடன்
சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த நூலகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
திருக்கோவில் பிரதேசத்தில் சிறப்பாக இயங்கி வரும் ஜந்து அறநெறிப் பாடசாலைகளுக்கு மின்சார சுருதி பெட்டிகளும் நூலகத் திறப்பு விழாவின் போது,
வழங்கப்பட்டதோடு, அறநெறிப் பாடசாலை மாணவிகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
ஆன்மிக அதிதியாக திருக்கோவில் முருகன் ஆலய குரு சிவஸ்ரீ நீ.அங்குசநாதக் குருக்கள், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன்,
திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன், உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன், மாவட்ட இந்துசமய கலாசார உத்தியோகத்தர் கே.ஜெயராஜ்,
திருக்கோவில் பிரதேச இந்துசமய கலாசார உத்தியோகத்தர் நிசாந்தி தேவராஜ் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.