அம்பாறை திருக்கோவிலில் அரச சார்பற்ற நிறுவனங்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது.

0
89

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் வாழும் வறிய மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்கான பணிகளை முன்னெடுத்து வருகின்ற அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகளுடனான
சேவை ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று இடம்பெற்றது.
திருக்கோவில் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் அனோஜா உஷாந்தின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில்
பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கூட்டம் நடைபெற்றது.
2021, 2022, 2023ஆம் ஆண்டுக்கான அரசசார்பற்ற நிறுவனங்களின் பணிகள் தொடர்பான தெளிவூட்டல்கள் இடம்பெற்றதோடு,
கொரோனா தாக்கம் காரணமாகவும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் திருக்கோவில் பிரதேச மக்களின் உணவு மருத்துவம் மற்றும் உயிர்பாதுகாப்பு தொடர்பாக பணியாற்றிய நிறுவனங்களுக்கு பிரதேச செயலாளர் நன்றி தெரிவித்தார்.
திருக்கோவில் பிரதேசத்தில் வாழும் வறிய குடும்பங்களுக்கு தேவையான வீடுகள் கல்வி சுகாதாரம் போன்ற எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்திப் பணிகள்
தொடர்பாகவும் ஆலோசனைகள் திட்டங்கள் முன்மொழியப்பட்;டன.
கூட்டத்தில் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன், சமுர்த்தி தலைமை முகாமையாளர் வி.அரசரெத்தினம், கிராம சேவை நிர்வாக அதிகாரி கந்தசாமி,
விடய அபிவிருத்தி உத்தியோகத்தர் தினேஷ் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என பலரும் பங்கேற்றனர்.