அம்பாறை திருக்கோவில் மண்டாணை பூம்புகார் அறநெறிப் பாடசாலையின் நான்காவது ஆண்டு பூர்த்தியும் சேவையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும்
மண்டானை கிராமத்தில் இடம்பெற்றது.
அறநெறிப் பாடசாலையின் ஸ்தாபகர் லோகநாயகம் சரவணபவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் கலந்துகொண்டார்.
நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன், கொழும்பு இந்து வித்தியா விருத்தி சங்க தலைவரும் அகில இலங்கை இந்துமா மன்றத்தின் உப தலைவர் கலாநிதி த.முத்துகுமார சுவாமி உட்பட பலரும் பங்கேற்றனர்.