அம்பாறை நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு பிரதான வீதியில் இன்றைய தினம் யுக்திய சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்மவின் ஆலோசனைக்கமைய, கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல். புத்திகவின் வழிகாட்டலில், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீரின் ஒருங்கிணைப்பில், கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் இவ்விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
நற்பிட்டிமுனை-சேனைக்குடியிருப்பு பிரதான வீதி ஊடாக போக்குவரத்தில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் சோதனையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.