அம்பாறை நிந்தவூரில் மனத்துயர் பரிகார மையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது

0
137

அம்பாறை நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் தகவல் வெளியீட்டு பணியகம் மற்றும் மனத்துயர் பரிகார மையம் ஆகியவற்றின் அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் றிபாஸின் வழிகாட்டலுக்கு அமைவாக, சுகாதார சேவையை மேம்படுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் முன்னுதாரணமாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய பிரிவுகளின் மூலம் வைத்தியசாலையின் செயற்பாடுகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறுகின்ற, வைத்தியசாலையின் ஊடாக மக்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய செயற்பாடுகளை சந்தைப்படுத்துகின்ற நோக்குடன், இப்பிரிவு திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் றயீஸ், நிந்தவூர் ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் றசீன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நிர்வாக உத்தியோகத்தர் வஜிதா உட்பட பலரும் கலந்து கொண்டனர்