அம்பாறை பெரிய நீலாவணை பகுதியில் விபத்து

0
76

அம்பாறை பெரிய நீலாவணை பகுதியில் மீன் ஏற்றிச் சென்ற வண்டி மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து மோதி இன்று
விபத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

அக்கரைப்பற்றிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்தும், மட்டக்களப்பு கல்முனை வீதி வழியாக வந்த சிறிய ரக மீன் ஏற்றிச் செல்லும் வண்டியும் மோதியே விபத்து சம்பவித்துள்ளது.

இரு வாகனங்களின் சாரதிகளும் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. வேகக் கட்டுப்பாட்டை மீறி பயணித்ததனாலேயே, விபத்து இடம்பெற்றதாக நேரில் கண்டவர்கள்
குறிப்பிட்டிருந்தனர்.