அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்ட இலங்கை நிர்வாக சேவை தரம்1 அதிகாரியான காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் இன்று தமது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அம்பாறை மாணிக்க விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜையில் கலந்துகொண்டதன் பின்னர், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கரம முன்னிலையில் நியமன கடிதத்தில் கையொப்பமிட்டு கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.
நிகழ்வில் அரசாங்க அதிபர், உயர் அதிகாரிகள், அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றம் உள்ளிட்ட பொது அமைப்புக்கள் மேலதிக அரசாங்க அதிபருக்கு வாழ்த்தியதுடன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர். ஐந்து வருட கால சேவையை பூர்த்தி செய்து தற்பொழுது அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.