எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் உண்மையான நிலை தெரியவரும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
‘பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அரகலய சம்பவத்தின் பின்னரும் பாடம் கற்கவில்லை. அவர்கள் தமது கட்சி பற்றி மாத்திரமே பேசுகின்றனர்.
பெரமுன உறுப்பினர்கள் நாட்டை பற்றியோ மக்களை பற்றியோ பேசுவதில்லை. அவர்கள் கட்சியை பலப்படுத்துவதற்கு மாத்திரமே விரும்புகின்றனர். இந்த நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பொதுஜன பெரமுன உறுப்பினர்களின் உண்மையான நிலை தெரியவரும்’ என ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.