தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள், ஜனநாயக போராட்டங்களை இல்லாதொழிக்கும் நடவடிக்கை என்பதுடன், அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி, போராட்டக்காரர்களும் கைது செய்யப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும், யாழ்ப்பாணம் வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபை தவிசாளர் அ.ஜெபநேசன் தெரிவித்துள்ளார்.
இன்று, பிரதேச சபையில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார்.