அரசாங்கத்துக்குள் பூகம்பம் வெடிக்கும், விமல் வீரவன்ஸ தெரிவிப்பு!

0
97

‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு ஆட்டம் காண ஆரம்பித்துள்ளது. ஜனவரி மாதம் ஆகும்போது அரசுக்குள் பூகம்பம் வெடிக்கும். என்று தேசிய தந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியில் இடம்பெறும் தவறை அன்று நானும்இ கம்மன்பிலவும் சுட்டிக்காட்டியபோது அமைச் சரவையில் இருந்து நாம் வெளி யேற்றப்பட்டோம்.


அதுபோலவே ரொஷான் ரணசிங்கவும் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளார். அரசின் வீழ்ச்சி பயணம் ஆரம்பித்துவிட்டது என்பதையே இது எடுத்துக்காட்டுகின்றது. இது இத்துடன் நின்று விடாதுஇ ஜனவரி மாதம் ஆகும் போது அரசுக்குள் மேலும் மோதல் வலுத்திருக்கும்.


ரொஷான் ரணசிங்கஇ இலங்கை கிரிக்கெட் சபை தொடர்பிலேயே விமர்சனம் முன்வைத்தார். இது தொடர்பில் ஆராய்ந்து பார்த்து ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதைவிடுத்து ரொஷான் ரணசிங்க நீக்கப்பட்டுள்ளதன் மூலம்இ ஜனாதிபதியும்இ அரசும் கிரிக்கெட் சபை பக்கமே நிற்கின்றது என்பது உறுதியாகின்றது.