தனது தனிப்பட்ட முகநூல் கணக்கு ஹாக் செய்யப்பட்டு, அரசாங்கத்தை விமர்சித்து, சில பதிவுகள் பதிவிடப்பட்டுள்ளதாகவும், அவ்வாறான பதிவுகளுக்கும், தமக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை எனவும், கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
பல நாட்களாக தனது கணக்கு ஹாக் செய்யப்பட்டதாகவும், இது குறித்து தான் தெரிவித்ததாகவும், அமைச்சர் ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கணக்கை முழுமையாக மீட்க முடியும் எனவும், எனினும் விசாரணைக்கு அழைப்பு விடுப்பதாகவும் குறிப்பிட்ட அமைச்சர் விமல் வீரவன்ச, கணக்கை ஓவர்டேக் செய்த நபரால், பல பதிவுகள் பகிரப்பட்டதாகவும், அமைச்சரை விமர்சித்து இந்த பதிவுகளுக்கு, நூற்றுக்கணக்கான கருத்துகள் வந்ததாகவும் தெரிவித்தார்.
அந்த காலகட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர் பகிர்ந்த பதிவுகள் தொடர்பில், எந்தவித ஆய்வும் இன்றி கருத்து தெரிவித்தவர்கள், மோதலை ஏற்படுத்தியவர்கள் மீது, நான் பரிதாபப்படுகிறேன் எனவும், கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.