அரசியல் வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும், பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் : ஜீவன் தொண்டமான்

0
114

அரசியல் வேறுபாடுகள், கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும், பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என, நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ‘பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதே, உண்மையான நல்லிணக்கத்தின் முதல் படியாக அமையும்’ என, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி, சர்வஜன நீதி அமைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில், நாடளாவிய ரீதியில், கையெழுத்து திரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், நுவரெலியா, ரிகில்கஸ்கட பகுதியில், இன்று, கையெழுத்து திரட்டப்பட்டது. இதில் பங்கேற்று, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில், ஜீவன் தொண்டமான் கையொப்பம் இட்டார். அதன் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், நுவரெலியாவில், ஊடக சந்திப்பை நடத்தியுள்ளார்.