இந்தியக் கடனுதவித்திட்டத்தின்கீழ் 50,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்யத் தீர்மானம்
இந்தியக் கடனுதவித்திட்டத்தின் கீழ் 50,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரதமர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்தியக்கடன் தொடர்பான கலந்துரையாடலின்போதே, இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி இதற்குத் தேவையான நிதியை இந்திய கடன் உதவித் திட்டத்தின் கீழ், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்திற்கு ஒதுக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அரிசி தட்டுப்பாட்டைத் தவிர்ப்பதற்கும், அரிசி விலை அசாதாரணமாக அதிகரிப்பதைத் தடுப்பதற்கும் இந்த நடவடிக்கை உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் அரச மற்றும் தனியார் துறை அதிகாரிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.