அரையிறுதிக்கு முன்னேறுமா நியூசிலாந்து…? – நாளை இலங்கையுடன் மோதல்

0
87

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் இடம்பெற்று வருகிறது. 

இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் போட்டிகளின் முடிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, அவுஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.

மிகுதியாகவுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. 

இதில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு அரையிறுதி சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் நாளை இடம்பெறவுள்ள முக்கியமான போட்டியில் இலங்கை – நியூசிலாந்து அணிகள் பெங்களூருவில் மோதவுள்ளன. 

இந்த போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் நியூசிலாந்து அணி விளையாடவுள்ளது.

வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும். ஒருவேளை தோல்வி அடைந்தால் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணிகள் தங்களது அடுத்த லீக் போட்டிகளில் தோல்வியடைய வேண்டும். அப்போது நெட் ரன் ரேட் அடிப்படையில் சிறந்த அணி அரையிறுதிக்கு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.