28 C
Colombo
Tuesday, September 17, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

அலரி மாளிகைக்கு முன்பாக புதிதாக ஆரம்பமான ‘நோ டீல் கம’ போராட்டம்!

அலரி மாளிகைக்கு முன்பாக முன்னாள் பிரதமர் மகிந்த பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி மைனா கோ கம எனும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களையடுத்து குறித்த பிரதேசத்தில் அமைதியின்மை ஏற்பட்;டிருந்தது.
இந்நிலையில் நேற்றையதினம் இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார்.
இதனையடுத்து குறித்த பிரதேசத்தில் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக, நோ டீல் கம எனும் புதிய போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் டீல் ஒன்றினை ஏற்படுத்தியே பிரதமர் பதவியினைப் பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தே குறித்;த போhட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles