அவுஸ்திரேலியாவில் முடக்க நிலை

0
256

மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் அவுஸ்திரேலியாவில் கொரோனா பரவல் மிக அதிகமாக இருந்தது. தற்போது குறைந்து விட்டது.

ஆனால், தெற்கு அவுஸ்திரேலியாவில் பல இடங்களில் புதிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.இதுவரையில் அவுஸ்திரேலியாவில் கொரோனாவின் மொத்த பாதிப்பு 27,785 பேர். இவர்களில் 25,506 பேர் குணமடைந்து விட்டனர். 907 பேர் மரணம் அடைந்துவிட்டனர்.

 இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் அடுத்த 6 நாட்களுக்கு நாடு முடக்க நிலைக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. தியேட்டர்கள், ஹோட்டல்கள், பள்ளி – கல்லூரிகள், சந்தைகள் உள்ளிட்டவை மூடப்படுகின்றன.

அத்தியாவசிய பணிகள் மட்டுமே அடுத்த ஆறு நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.அவுஸ்திரேலியா எடுத்திருக்கும் இந்த நிலை விரைவில் பல நாடுகளுக்குப் பரவும் என்றே கணிக்கப்படுகிறது.