ஆப்கான்: திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே மூடப்பட்டன பெண்கள் பாடசாலைகள்!

0
196

ஆப்கானிஸ்தானில் நேற்று புதன்கிழமை பெண்களுக்கான பாடசாலைகள் திறக்கப்பட்டன. ஆனால், சில மணி நேரங்களிலேயே பாடசாலைகளை மூடுமாறு தலிபான் அரசாங்கம் உத்தரவிட்டமை அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன.

பல்வேறு நெருக்கடிகள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் சுமார், 200 இற்கும் மேற்பட்ட மாணவிகள் முதல்நாளில் பாடசாலைக்கு திரும்பியிருந்தனர். இந்நிலையிலேயே உயர்நிலைப் பாடசாலைகள் மூடப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது.

இதன்படி, ஆறாம் வகுப்புக்கு மேல் மாணவிகளுக்கான பாடசாலைகள் அனைத்தும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால், மாணவிகள் கண்ணீருடன் பாடசாலைகளை விட்டு வெளியேறினர்.

இதனிடையே, ஆப்கானிஸ்தானில் பாடசாலைகள் திறக்கப்பட்டமையை தலிபான்கள் ஆதரவு மதரச் சார்பு பத்திரிகை ஒன்று “பேரழிவு தரும் நாள்”, நேற்றைய தினம் தலைப்பு செய்தி வெளியிட்டு எதிர்ப்பு தெரிவித்திருந்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

முன்னதாக, 1996 – 2001ஆம் ஆண்டுவரையான தலிபான்களின் ஆட்சிக் காலப் பகுதியில் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான கல்வி மறுக்கப்பட்டது. வேலை வாய்ப்புக்களும் நிராகரிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.