28 C
Colombo
Friday, September 20, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

ஆறுதல் வெற்றியை பெறுமா இலங்கை ? – நியூஸிலாந்துடன் இன்று பலப்பரீட்சை

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதவுள்ள இன்றைய உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி பெங்களூருவின் பகல் 2 மணிக்கு தொடங்குகிறது.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ள இலங்கை அணி புள்ளிப்பட்டியலில் 9ஆம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

இன்றைய போட்டியில் இலங்கை அணியின் கடைசி லீக் போட்டியில் வெற்றிபெறாவிட்டால் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

இதேவேளை, பெங்களூரில் காலை 10 மணியளவில் வானம் மப்பும் மந்தாரமுமாக இருப்பதால் மாலையில் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை மழை பெய்து ஆட்டம் கைவிடப்பட்டால் இலங்கைக்கு ஒரு புள்ளி கிடைத்து அடுத்த போட்டியில் விளையாடுதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

இருப்பினும் இம்முறை உலகக் கிண்ண கிரிக்கெட்டில் மோசமான பெறுபேறுகளைக் கொண்டுள்ள இலங்கை தனது கடைசிப் போட்டியில் ஆறுதல் வெற்றியுடனாவது நாடு திரும்புவதற்கு முயற்சிக்கவுள்ளது.

ஆனால், நியூஸிலாந்தை வீழ்த்துவது இலங்கைக்கு பெரும் சவாலாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில் உலகக் கிண்ண கிரிக்கெட்டில் நான்காவது அணியாக தகுதிபெறுவதற்கு நியூஸிலாந்து கடுமையாக போட்டியிடும் என்பதில் சந்தேகமில்லை.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles