அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு புதர்மசங்கரி மைதானத்தில் இன்று லிற்றோ எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்பட்ட போதிலும் அவை காத்திருந்த மக்கள் அனைவருக்கும் போதுமானதாக அமைந்திருக்க வில்லை என பாதிக்கப்பட்டவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
கிடைத்த தகவலை அடுத்து நேற்றிரவு இரவு 10மணி முதல் குறித்த இடத்தில் காத்திருந்த மக்கள் இன்று காலை 8 மணிமுதல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுச் சென்றனர்.
12.5 கிலோ எரிவாயு சிலிண்டர்கள் 5000 ரூபாவிற்கும் 5 கிலோ எரிவாயு சிலிண்டர்கள் 2100 ரூபாவிற்கும் வழங்கப்பட்ட அதேவேளை, இன்று 300 எரிவாயு சிலிண்டர்கள் மாத்திரம் வழங்கப்பட்டது.
நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருந்த நிலையில் அவர்கள் அனைவருக்கும் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படாhத நிலையில் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.