இங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நபர் உயிரிழப்பு

0
193
இங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.செங்கல் சூளையில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டு, இங்கிரிய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.சந்தேகநபர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், நேற்று மாலை 6 மணியளவில் சுகவீனமுற்றுள்ளார்.வயிற்று வலி காரணமாக சந்தேகநபர் இங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இசுருபுர – இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.சடலம் ஹொரணை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.