இங்கிலாந்து முடக்க நிலை மேலும் நான்கு வாரங்களுக்கு நீடிப்பு

0
288

இங்கிலாந்தில் கோவிட் -19 கட்டுப்பாடு களை முற்றாக முடிவுக்குக் கொண்டுவருவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த இறுதி நாள் மேலும் நான்கு வாரங்கள் ஒத்தி வைக்கப்படுகிறது என்ற ;தகவலை பிரதமர் பொறிஸ் ஜோன் சன் இன்று வெளியிட்டிருக்கிறார். முடக்கத்தின் முடிவுநாள் ஜூன் 21
ஆம் திகதியில் இருந்து ஜூலை 19 ஆம் திகதிக்கு நகர்த்தப்படுகிறது.
அதன்படி அருந்தகங்கள், சினிமா போன்றவற்றில் ஆட்களின் எண்ணிக்கையை வரையறை செய்தல் போன்ற கட்டுப்பாடு
கள் மேலும் நான்கு வாரகாலம் நீடிக்கும்.இரவு விடுதிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
நான்கு வாரங்களுக்கு மேலும் கட்டுப் பாடுகளை நீடிக்க வேண்டிய நிலை தோன்ற மாட்டாது என நம்புவதாகப்
பிரதமர் கூறியிருக்கிறார்.
அங்கு நாடு முற்றாகக் கட்டுப்பாடுகளில் இருந்து விலகும் இறுதித் தினம் ஒரு “சுதந்திர நாள்” போன்று எதிர்பார்க்கப்பட்டுவந்தது. ஆனால் இந்தியத் திரிபு வைரஸ் அதனைக் குழப்பிவிட்டிருக்கிறது.
இந்தியாவில் தோன்றி உலகெங்கும்
பரவிவருகின்ற டெல்ரா வைரஸின் தொற்று அதிகரித்துவருவதை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அங்கு தொற்றாளர் எண்ணிக்கை வாராந்தம் 64 வீதத்தால் அதிகரித்து வருகிறது.
;;இங்கிலாந்தில் தற்போது 90 வீதமான தொற்றுக்களுக்கு ‘டெல்ரா’ என்கின்ற இந்தியாவில் கண்டறியப்பட்ட வைரஸ் திரிபே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.