மலேசியாவில் இருந்து இத்தாலி நோக்கி பயணித்த கப்பல் மீது, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட தாக்குதலில், குறித்த கப்பல் தீப்பிடித்து எரிவதாக, பிரித்தானிய இராணுவம் தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல், ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யேமனின் ஹூதைதா துறைமுகத்தில் இருந்து மேலும் ஒரு ஏவுகணை வீசப்பட்ட நிலையில், அது அந்தக் கப்பலுக்கு அருகே விழுந்ததாக, பிரித்தானிய இராணுவம் தெரிவித்துள்ளது.

ஹாஸா மோதல் தொடங்கியதில் இருந்து, ஹமாஸ் போராளிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.