இந்தியா செல்ல முயன்ற சிறுவர்கள் உட்பட 8 பேர் மன்னாரில் கைது

0
165

சட்ட விரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற சிறுவர்கள் உட்பட 8 பேர், மன்னார் – பேசாலை கடற்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரின் விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வவுனியா, திருகோணமலை மற்றும் தலைமன்னார் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்கள் கடற்படையினரால், பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பேசாலை பொலிஸார் அவர்களை விசாரணைகளின் பின்னர் நேற்று மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் 18 வயதிற்கு மேற்பட்ட 5 பேரையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையிலும், 18 வயதுக்கு குறைந்த 3 பேரையும் நிபந்தனைகள் இன்றியும் விடுதலை செய்தார்.
குறித்த வழக்கு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 14ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.