இந்திய உயர்ஸ்தானிகர்-அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்திப்பு

0
78

இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கிடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
கொழும்பில் அமைந்துள்ள இந்திய இல்லத்தில் நேற்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது இந்திய வீடமைப்பு திட்டம், நீர்க் கட்டணத் திருத்தம், சமகால அரசியல், கல்வி மற்றும் மலையக அபிவிருத்திசார் விடயங்கள் தொடர்பாக இருவருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.