இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ‘பாரத்’ ஜெர்சியை அணிய வேண்டும் – சேவாக் சர்ச்சை பதிவு

0
102

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அணியும் ஜெர்ஸியில் ’பாரத்’ என குறிப்பிட வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் சர்ச்சை கிளப்பும் வகையில் பதிவிட்டுள்ளார்.இந்தியா என்ற பெயரை பாரத் என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஜி 20 மாநாட்டிற்கான அழைப்பிதழில் இந்திய குடியரசுத்தலைவர் என்பதற்கு பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தனது ட்விட்டர் பதிவில், “இந்திய கிரிக்கெட் அணியின் பெயரை பாரத் கிரிக்கெட் அணி என்று குறிப்பிட வேண்டும்.

இந்த உலகக் கோப்பை தொடரில் விராட் ஹோலி, ரோஹித் சர்மா, பும்ரா, ஜடேஜா உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ‘பாரத்’ என பெயர் குறிப்பிடப்பட்ட ஜெர்ஸியை அணிந்து விளையாட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் ‘பாரத்’ என்ற பெயர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சேவாக்கின் இந்த பதிவு பேசப்பட்டு வருகிறது.