29 C
Colombo
Tuesday, September 17, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இந்திய பிரஜை உட்பட 6 பேர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 3 கோடி ரூபா பெறுமதியான பொருட்களுடன் இந்திய பிரஜை உட்பட 6 பேர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய பிரஜை ஒருவரும், கொழும்பு, கொழும்பு செட்டியார்தெரு, வத்தளை, ஹட்டன் மற்றும் கொட்டகலை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த நபர்களும், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்தியாவில் இருந்து இரு வேறு விமானங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இதன் போது அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்களிடம் இருந்து 159 மதுபான போத்தல்கள், சொக்கலட் வகைகள், 5 கிலோ கிராம் ஏலக்காய், நகைகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஆடை என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அதனையடுத்து சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles