இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான விசேட தூதுக்குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
குறித்த தூதுக்குழுவினர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இந்தக் குழுவில் இந்திய அரசாங்கத்தின் பிரதான பொருளாதார ஆலோசகர் ஆனந்த் நாகேஸ்வரனும் அடங்குவதாக வெளிவிகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து ஆராயும் நோக்கில் இந்த குழு இலங்கை வருகைத்தந்துள்ளது.