இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று இலங்கை வருகிறார். இலங்கை வரும் அவர், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்துவார். அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன், இணைச் செயலர் புனித் அகர்வால், இயக்குநர் சந்தீப் குமார் பையப்பு, இலங்கை துணைச் செயலர், நிதி சௌத்ரி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் துணைச் செயலர் ரகூபூரி ஆகியோரும் வருகைத்தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.