இந்து ஸ்வயம் சேவ சங்கத்தின் ஏற்பாட்டில் சேவா இன்டர்நேஷனல் பவுண்டேசன் அமைப்பின் அனுசரணையில் அம்பாறை ஆலையடிவேம்பு பகுதியில்
வதியும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
ஆலையடிவேம்பு பிரதேச பொறுப்பாளர் ஓய்வுநிலை அதிபர் கிருபராஜா தலைமையில், ஸ்வயம் சேவசங்கத்தின் காந்தன் ஒருங்கிணைப்பில் அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய ஒன்று கூடல் மண்டபத்தில் உலருணவு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. பிரதமஅதிதியாக வைத்தியர் திருமதி.சித்திராதேவராஜன் கலந்து சிறப்பித்தார்.
இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் அம்பாறை மாவட்டத்திற்கு தலைமை வகிக்கும் இரா.குணசிங்கம், கல்முனை பிராந்தியத்திற்கு பொறுப்பாளராகிய தர்மராஜ்,
ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்ற தலைவர் சந்திரசேகரம், ஆலையடிவேம்பு ஸ்வயம் சேவகசங்கத்தின் உறுப்பினர் சரவணபவான், அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய தலைவர் சுகிர்தகுமார் உட்பட ஆலயங்களில் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 20 பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான நிவாரணஉதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.