இந்தோனேசியாவில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் 12 பேர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமத்ரா தீவில் பெய்த கனமழை காரணமாக மண், பாறைகள், மரங்கள் ஆகியவை உயரமான பகுதியிலிருந்து அடித்து வரப்பட்டு ஆற்றுக்குள் விழுந்ததால் அதன் கரை உடைந்து மலையடிவார கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரிகள்தெரிவிக்கின்றனர்இதனால் பாதிக்கப்பட்ட பகுதியில் 12 பேரைக் காணவில்லை எனவும் அவா்களைத் தேடும் பணிகளில் தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் 12 வீடுகள், ஒரு தேவாலயம், ஒரு பாடசாலை ஆகியவை சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் 50 குடும்பங்களைச் சேர்ந்தோர் இடம்பெயர்ந்து அரசின் தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.