நாடளாவிய ரீதியில், சித்திரைப் புத்தாண்டின் போது விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளை, மக்கள் கொள்வனவு செய்யும் போது, மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என, சுகாதார அமைச்சின், சுற்றாடல் சுகாதாரம், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவு சுகாதார பிரதி பணிப்பாளர் நாயகம் திலக் சிறிவர்தன வலியுறுத்தியுள்ளார்.
சில தயாரிப்பாளர்கள், இனிப்பு வகைகளை தரமற்ற முறையில் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.
காலாவதி திகதி அல்லது உள்ளடக்கம் தொடர்பில், உரிய முறையில் குறிப்பிடாமல், உணவை விற்பனை செய்வதால், நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
எவ்வாறாயினும், இந்த பண்டிகைக் காலத்தில், தேவையற்ற இனிப்புகள் விற்பனை செய்யப்படுமாயின், அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்க முடியும்.
அல்லது, 011 211 27 18 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொண்டு, சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு தகவல் வழங்க முடியும்.
இவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பில், அவசர நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன், சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்புப் பிரிவின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவில் இருந்து, தேவையான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும்.
என சுகாதார அமைச்சின், சுற்றாடல் சுகாதாரம், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவு சுகாதார பிரதி பணிப்பாளர் நாயகம் திலக் சிறிவர்தன குறிப்பிட்டுள்ளார்.