இந்தியாவின் 73ஆவது குடியரசு தினம் இன்று. குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தில், சென்னை மெரினா கடற்கரையில் காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்றன.
தமிழக ஆளுநர் ஆ.என்.ரவி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
முப்படையினர், கடலோர காவல்படை, முன்னாள் இராணுவத்தினர், துணை இராணுவப் படை, தமிழ்நாடு பேரிடர் நிவாரணப் படை, காவல், சிறை, தீயணைப்பு, வனத்துறை, ஊர்க்காவல் படையினர், தேசிய மாணவர் படை, கடல்சார் கழகம் உள்ளிட்ட பல்வேறு படைப்பிரிவின்
அணிவகுப்பு மரியாதையைகளையும் ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.
பல்வேறு துறைகளில் சிறப்பாக செயற்பட்டவர்களுக்கு அண்ணா பதக்கம், உத்தமர் காந்தியடிகள் காவலர் பதக்கம்,
திருந்திய நெல் சாகுபடிக்கான வேளாண்மைத்துறை சிறப்பு விருது, மதநல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது ஆகியவற்றை
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி வைத்தார்.
தமிழகத்தின் பல்வேறு துறைகளின் அலங்கார ஊர்திகள் பவனி இடம்பெற்றது.
கொரோனா தொற்று பரவல் காரணமாக 30 நிமிடங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் நிகழ்வுகள் ஒழுங்கமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.