இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

0
70

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளையில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் உள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மாகாணத்திலும் புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் 40-45 கி.மீ வரை பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கடும் காற்றுடன் இடி, மின்னல் தாக்கங்களுடன் கூடிய அசாதாரண காலநிலையின் போது ஏற்படக் கூடிய அனர்த்தங்களை தவிர்த்துக் கொள்வதற்கு முன்கூட்டிய ஆயத்தங்களுடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை கோரியுள்ளது.