இப்படியும் நடக்கிறது…!

0
193

எண்பதுகளில் ஒருநாள், யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் இந்த ஊர்க்குருவி நின்றுகொண்டிருந்தார்.
வைர மாளிகை விளம்பரங்களுடன் ஓர் உயரமான மனிதர் அன்றைய பத்திரிகைகளை விற்றுக்கொண்டு, பஸ் நிலையத் தில் ஒவ்வொரு தரிப்பிடமாக முன்னால் வந்து கத்திக்கத்தி, பத்திரிகையை விற்றுக்கொண்டிருந்தார்.
எண்பதுகளுக்கு முன்னர் யாழ்ப்பாண பஸ் நிலையத்திற்கு போய் வந்தவர்களுக்கு இப்போது அந்த வைர மாளிகை நினைவில் வந்துசென்றிருப்பார்.
“அதிசயம், ஐம்பது குற்றவாளிகள்’’ என்று கத்திக் கொண்டே அவர் சென்று கொண்டிருந்தார்.
அருகில் நின்ற ஒருவர் ஆர்வத்துடன் பத்திரிகையை விலைக்கு வாங்கிப் பக்கங்களைப் புரட்டினார்.
“ஐயா, நீங்கள் கத்தியது போன்று எந்தச் செய்தியும் இல்லையே’’ என்றார்.
“இதுதான் அதிசயம், ஐம்பத்தொரு குற்றவாளிகள்’’ என்று
‘வைர மாளிகை’ அடுத்த தரிப்பிடத்தில் கத்திக்கொண்டிருந்தார்.
இந்தச் சம்பவம்தான் அந்தப் போட்டியைப் பார்த்தபோது ஞாபகத்திற்கு வந்தது.
சிறீதரன் எம். பி. இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதிய விடயத்தில் தனி ஆவர்த்தனம் எடுப்பது பற்றி ஏற்கனவே இந்தப் பத்தியில் குறிப்பிட்டிருந்தேன்.
இதுதொடர்பாக நான் எழுதிய மறுதினம் என்னைத் தொடர்புகொண்ட நண்பர் ஒருவர், “இது எல்லாம் அரசியல் ஐசே, இதைக்கூட புரிந்துகொள்ள முடியாத நீங்கள் எல்லாம் அரசியல் கருத்துச் சொல்லிக்கொண்டு…’’ என்று திட்டியி ருந்தார். அதுபற்றி அப்போது பெரிதுபடுத்தாமல் விட்டுவிட் டேன்.
அது அவரின் ஊகம், அதனை பொதுவெளியில் கதைப்பது சரியல்ல என்பதால்.
ஆனால், ‘டான் ரீ.வி’யில் ஞாயிறன்று ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் சிறீதரனின் கருத்துக்களை கேட்டபோது, அன்று அந்த நண்பர் சொன்னது சரியாகத்தான் இருக்குமோ என்று எண்ணத் தோன்றியது.
பதின்மூன்றை வலியுறுத்தி கடிதம் எழுதுவதுதான், ரெலோவின் ஆரம்ப முயற்சியாக இருந்தது என்பது உண்மை தான்.
ஆனால், பதின்மூன்றை வலியுறுத்தி எழுதும் கடிதத்தில் கையெழுத்திடமுடியாது என்று சம்பந்தன் ஐயா விடாப்பிடி யாக இருந்ததால்தான், அந்த முயற்சியில் மனோ கணேசனும், ஹக்கீமும் விலகினார்கள் என்பதும் இரகசிய மானதல்ல.
தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி எழு தப்படும் இந்தக் கடிதத்தில் கையொழுத்திட முடியாது என்பதுதான் மனோ கணேசன் முன்வைத்த வாதம்.
அப்படி யானால் கடிதம் சொல்வது என்ன என்பது அதனை படித்து
மட்டுமே அறிந்துகொள்ளவேண்டியதல்ல.
ஆனால், தமிழர்களின் தீர்வை பதின்மூன்றுக்குள் முடக்கி விட்டார்கள். ஒற்றையாட்சிக்குள் முடக்கிவிட்டார்கள் என்று முன்னணி திரும்பத்திரும்ப கூறியபோது, ஒரு பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால் அது பொய்யாகிவிடும் என்பதுபோல பலராலும் நம்பப்படலாயிற்று.
அப்போதுதான், முன்னணி அதனை வைத்து பேரணி நடத்த முன்வந்தது.
எங்கே இது முன்னணிக்கு சாதகமாகி விட்டாலும் என்றுதான் சிறீதரன் கூட்டமைப்புக்குள் அந்தக் கடிதத்திற்கு எதிராகக் குரல்கொடுக்க ஆரம்பித்தார்.
ஆக, முன்னணிக்கு மாற்று கூட்டமைப்புக்குள்ளும் இருக்கிறது என்ற மாயையை உருவாக்கும் முயற்சியே இது என்று அந்த நண்பர் சொன்னது அவரின் ஊகம் என்று அப்போது நினைத்திருந்தேன்.
ஆனால், அந்தப் பேட்டியில் சிறிதரன் பதின்மூன்றை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று திரும்பத்திரும்பக் கூறிய சம்பந்தன் ஐயா எப்படி அதில் கையெழுத்திடலாம் என்று கேட்டதைப் பார்க்கும்போது, இவர் இந்தக் கடிதத்ததை படித்துப் பார்த்துவிட்டு கதைப்பவர் போல தெரியவில்லை.
மாறாக, அந்த நண்பரின் ஊகம்தான் காரணம் போலவே இருந்தது.
அந்தக் கடித்ததை படித்துப் பார்த்துவிட்டு, வரிக்கு வரி விளக்கமளித்து தனது கட்சிக்காக போராடும் போராளியாக இல்லாமல், இவ்வாறு கருத்துரைப்பதும் ‘சேம் சைற்’ கோல்போட்ட உதைபந்தாட்ட வீரரின் நிலைதான்.
எப்படியோ கடந்த தேர்தலில் தவறான முடிவெடுத்ததில் பல ஆயிரம் வாக்குகளை இழந்தபோதிலும், கிளிநொச்சி மண் கைகொடுத்ததால் எம். பியானதுபோலவே அடுத்த தேர்தலையும் சந்திக்கநேரும்.
தட்டித்தவறி மாகாண சபைக்கு தேர்தல் நடந்தால், கிளி நொச்சியில் தனது படையணியை இறக்கி வெற்றிபெறவைப் பது அவருக்கு கடினமானதாகவே இருக்கப் போகின்றது. பதின்மூன்றை ஏற்கமறுத்தவிட்டு, அதில் கிடைக்கும் பத வியை அனுபவிக்க அவரும் விரும்பமாட்டார்.
இந்த இடைவெளியைப் பயன்படுத்தி அவருக்கு ‘பிடிக்காத சிலர்’ சுழித்து ஓடி வென்றுவிட்டால், அவ்வாறு வெற்றி பெறுபவர், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் அவருக்கு ‘குடைச்சல்’ கொடுக்கவும் வழிவகுக்கலாம்.!

  • ஊர்க்குருவி