இப்படியும் நடக்கிறது…!

0
192

தாயகத்தில் யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது, ஒரு புலம்பெயர் நாடொன்றில் நடந்த மேடை நாடகம் ஒன்றை காணொலியில் பார்த்த ஞாபகம். ஊரில் தாக்குதல் நடக்கும் செய்தியை ஒருவர் மற்றவருக்கு சொல்லுவார். உடனே மற்றவர் கேட்பார்,’அவங்களில எத்தினை? எங்களில எத்தினை?’ என்று.அவருக்கு ‘எங்களில்’ பார்க்க ‘அவங்களில்’ பலர் இறந்திருக்க வேண்டும் என்பதுதான் விருப்பம் என்பதை அவரின் கேள்வியே உணர்த்தி நிற்கும். அவரைப் பொறுத்தவரை ‘அவங்களில்’ அதிகம் என்றால் மகிழ்ச்சிதான். ஆனால், ‘எங்களில்’ – அதுதான் நமது இளைஞர்கள் மடிவது ஒன்றும் அவருக்கு பெரிய விடயமாகத் தெரியாது. ஏனெனில், மடிவது அவரின் பிள்ளைகள் இல்லைத்தானே என்பதை அவருக்கு உணர்த்துவதுபோல நாடகம் சென்றுகொண்டி
ருக்கும். அந்த நாடகத்தில் இன்னுமொரு விடயமும் சொல்லப்படும். படையினரால் ஒரு தமிழர் சுட்டுக் கொல்லப்பட்டால், அது படையினர் சுட்டுக்கொன்றனர் என்று தெளிவாக அந்தச் செய்தி சொல்லும். ஆனால், அதுவே நமது இயக்கத்தவர்களால் ஒருவர்- ஒரு தமிழர் சுட்டுக்கொல்லப்பட்டால் இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொலை என்றுதான் அந்தச் செய்தி சொல்லும். இது அந்தக் காலத்தில் நமது தமிழ் ஊடகங்களின் ‘செல்நெறி’. ‘ஈழநாடு’வும் உட்படத்தான். இதை ஏன் இப்போது சொல்கிறீர்கள் என்று கேட்கலாம். வேறு ஒன்றுமில்லை. நேற்று லண்டனிலிருந்து
ஒருவர் தொலைபேசியில் பேசினார். முன்னாள் போராளி இயக்கம் ஒன்றின் முக்கியஸ்தர் அவர். இந்த இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக
எழுதிய சமாச்சாரங்களை ஞாபகப்படுத்தியவர், ‘அந்த பழக்கதோஷம் இன்னும் ‘ஈழநாடு’வுக்கு போகயில்லைப் போல…’ என்றார். எனக்கு அவர் எதைச் சொல்லல வருகிறார் என்று தெரியவில்லை. ‘விளக்கமாகத்தான் சொல்லுமன்’ என்று கேட்டேன்.
‘இல்லை. சுமந்திரன் யாரைச் சந்தித்தாலும் அல்லது எந்த விடயம் குறித்து கருத்துச் சொன்னாலும் அது கூட்டமைப்பின் சந்திப்பு, அல்லது கூட்டமைப்பின் கருத்து என்று எழுதுகிறீர்கள். தலைப்பு போடுகிறீர்கள். ஆனால், ரெலோ சந்தித்தால் அல்லது கருத்துச் சொன்னால் மட்டும் அது என்ன கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ சந்திப்பு என்று போடுகிறீர்கள்?’, என்றார். அது பத்திரிகைகளின் தவறு அல்லவே, அந்தச் சந்திப்பு முடிந்த பின்னர் ரெலோ ஊடகங்களுக்கு அனுப்பிய அறிக்கையில் ரெலோ சந்தித்ததாகத்தானே எழுதியிருந்தார்கள். அப்படியிருக்கையில், நாங்கள் எப்படி கூட்டமைப்பு என்று போடுவது என்று திரும்
பக் கேட்டபோது, அவர் சொன்னார். ‘அது எனக்கும் தெரியும். ஆனால், நான் முன்னர்
இயக்கங்களால் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்ற போது நீங்கள் இனந்தெரியாவதர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக எழுதுவதை ஏன் ஞாபகப்படுத்தி
னேன்?’, என்று கேட்டவர், தானே பதிலையும் சொன்னார். ‘இயக்கங்கள்மீது மக்களுக்கு வெறுப்பு வரக்கூடாது என்ற நல்ல நோக்கம்தானே? அதுபோலத் தான், தமிழ் அரசுக் கட்சியிலிருந்து ஒருவர் தனிப்பட்ட வகையில் நடத்தும் சந்திப்புக்களையும் அறிக்கைகளையும் கூட்டமைப்பின் பெயரில் வெளி யிடுகின்றீர்கள், அதுவும் கூட்டமைப்பைப் பாதுகாக்கத்தானே’, என்று கேட்டார் அவர்.
அவருக்கு தெரியவில்லையோ என்னவோ, இப்படி போடுவதால்தான், கூட்டமைப்பே இப்படி தமிழ் மக்களின் நம்பிக்கையை வேகமாக இழந்து கொண்டிருக்கின்றது என்பது. ரெலோவின் சந்திப்பு, தமிழ் அரசின் ஒருசிலரின் தனிப்பட்ட நடவடிக்கைகள் பற்றி எழுதுகின்றபோது தான், அண்மையில் நடந்த தமிழ் அரசுக் கட்சியின்
உள்ளூராட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பில் சிவஞானம் சிறீதரன் எம். பி. தெரிவித்த கருத்துக்களும் ஞாபகத்துக்கு வருகின்றன. அவரின் அந்த கருத்துக்கள்
பற்றி பிறிதொரு நாளில் பேசுவோம்.! –