இப்படியும் நடக்கிறது

0
122

அந்தக் காலத்தில் தமிழக சஞ்சிகைகளில் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு நகைச்சுவை துணுக்கு போட்டிருப்பார்கள்.
அந்தத் துணுக்குகளைப் படிப்பதற்காகவே பூபாலசிங்கம் புத்தகக் கடையில் ஓடர் கொடுத்துவைத்து தமிழக சஞ்சிகைகளை வாங்கிப் படிப்பதுண்டு.
முன்னர் ஒரு தடவை அப்படிப்படித்த ஒரு துணுக்கு இப்போது ஞாபகத்துக்கு வருகின்றது.
வழக்கறிஞர்: (நீதிமன்றத்தில்) அந்தக் கொள்ளை எப்பொழுது நடந்தது?
சாட்சி : நான் சிந்தித்துச் சொல்கிறேன்.
வழக்கறிஞர்: உனக்கு என்ன தெரியும் என்பதை இந்த நீதிமன்றத்திற்குச் சொல். நீ என்ன சிந்திக் கிறாய் என்பது இங்கே தேவையில்லை.
சாட்சி : நான் சிந்தித்துப் பேசுவது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் என்னை வெளியே செல்ல அனுமதியுங்கள்.
சிந்திக்காமல் எதையும் பேச நான் உங்களைப்போல வழக்கறிஞர் அல்ல.
இந்தப் பத்தியில் இனி எழுதப்போகின்ற விடயம் சட்டத்தரணியோடு சம்பந்தப்பட்டதால் இந்த துணுக்கு ஞாபகத்துக்கு வந்தது.
சனல் – நான்கு ஆவணப்படம் ஏற்படுத்திய அதிர்வலைகள் ஓய்ந்து இப்போது முல்லைத்தீவு நீதிவான் அந்த இடத்தை பிடித்திருக்கிறார்.
அவர் மீதான அச்சுறுத்தல் பற்றிய செய்திகள் தமிழ் மக்களுக்கு புதியவை அல்ல.
ஆனால்இ அவர் நாட்டைவிட்டு வெளியேறியமை தொடர்பாக பலரும் பல்வேறு ஊகங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு
வருகின்றனர்.
அவருக்கு ஏற்பட்ட அழுத்தம் அவருக்கு மாத்திரமே உணர்ந்துகொள்ளக்கூடியது என்பதில் இருவேறு கருத்துகள் இருக்கமுடியாது.
ஆனால்இ ஒரு நீதிபதிக்கே இந்த நிலை என்றால் சாதாரண தமிழ் மக்களின் நிலை என்ன என்று கேள்வி கேட்காதவர்கள் இல்லை.
அவரைப் பாராட்டவேண்டும் என்பதற்காக ஒருவர் அவரின் தீர்ப்பின் பிரதி ஒன்றை அப்படியே படம் எடுத்து அதிலுள்ள ஒரு
வசனத்தை தனது முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.
அவ்வாறு பதிவிட்டவர் சாதாரண பிரஜை அல்ல.
அவரும் ஒரு சட்டத்தரணி.
தமிழ் தேசிய கட்சியொன்றின் பேச்சாளர்.
பதவி விலகிய முல்லைத்தீவு நீதிவானின் அந்தத் தீர்ப்புஇ தியாகி திலீபனின் நினைவு வைபவங்களுக்கு தடை விதிக்கக்கோரி
பொலிஸார் தாக்கல் செய்த வழக்கில் அவர் வழங்கிய தீர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டது.
அந்த தீர்ப்பில் நீதிவான் சொல்லியிருப்பது: ‘உண்மையில் இராசையா பார்த்தீபன் அல்லது திலீபன் என்பவர் தமிழ் மக்களின் உள்ளங்களில் ஒரு தியாக தீபமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.
அவரை நினைவுகூருவதை தடை செய்தாலேயே பொதுமக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்படுமென்று மன்று கருதுகின்றது’.
இதுதான் அந்த தீர்ப்பின் ஒரு வசனம்.
அதாவது திலீபன் பற்றிய அவரின் கருத்து அவரின் சொந்த கருத்தாக இருந்திருந்தால் அது தவறானதல்லதான்.
ஆனால்இ அவர் தனது மனதிலுள்ளதை தீர்ப்பில் எழுதியிருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்று தெரியவில்லை.
அவர்தான் தீர்ப்பில் அதனை எழுதினார் என்றால் அதனை பொதுவெளியில் வெளியிடுவது பற்றி கொஞ்சமென்றாலும் யோசிக்க வேண்டாமா?
இன்று அவர்மீது தெற்கில் சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாகியிருப்பது அவர் தனது தீர்ப்பில் சொல்லியுள்ள இந்த
வாக்கியம்தான்.
இதுபற்றிய தகவலை பகிர்ந்துகொண்ட ஒரு தமிழ் அரசியல்வாதிஇ அவர் மீதான மற்றுமொரு கேள்வியையும் கேட்டார்.
அவர் தனது பெயரில் வழக்குகள் இருக்கின்றன என்று சொல்லியிருக்கிறாரேஇ அது எப்படி ஒரு நீதிவானின் பெயரில் அவருக்கு எதிராக வழக்கு போடமுடியும்? என்று.
உண்மைதான்.
ஒரு நீதிவானின் தனிப்பட்ட பெயரில் வழக்கு தாக்கல் செய்யமுடியாதுதான்.
ஆனால்இ அதனையும் இலங்கை நீதித்துறை வரலாற்றில் செய்துகாட்டியவர்கள் நாங்கள்தானே.
அப்போது கல்முனை நீதிபதியாக இருந்த மா. கணேசராஜா மீது அவர் பெயரிலேயே அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்த
நமது சட்ட மேதைகள்தான் அதற்கும் வழிசொல்லிக்கொடுத்தவர்கள்.
இந்தப் பத்தியை எழுதுவதற்காக யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு சட்டத்தரணியுடன் பேசியபோது அவர் சில கேள்விகளைக் கேட்டார்.
‘தனது பொலிஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்டதாக பதவி விலகிய நீதிபதி தெரிவித்திருந்தார்.
ஆனால்இ அதனை பொலிஸ் பேச்சாளர் மறுத்திருக்கிறார்.
தன்னை சட்டமா அதிபர் அலுவலகத்துக்கு அழைத்து தனது கட்டளையை மாற்றுமாறு சட்டமா அதிபர் வற்புறுத்தினார் என்று
தெரிவித்திருக்கிறார்.
ஆனால்இ அப்படி அவரை அழைக்கவில்லை என்றும் தொலைபேசியிலேயே பேசியதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதேவேளை வழங்கிய கட்டளையை மாற்றுங்கள் என்று ஒரு சட்டம் தெரிந்த எவரும் கேட்கமாட்டார்கள் என்பது புரிந்துகொள்ளக்கூடியதே.
அப்படியிருக்கையில் மிகப்பாரதூரமான குற்றச்சாட்டை நீதிபதி தெரிவித்திருக்கிறார்.
அப்படி அவர் கேட்டார் என்பதையும் அவர் நிரூபிக்கவேண்டிய நிலையில் இருக்கிறார்.
அதைவிட தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது என்றால் அவர் அதுபற்றி முதலில் பொலிஸில் முறைப்பாடு
செய்திருக்கவேண்டும்.
ஒரு நீதிபதியே இதனைச் செய்யாதபோது சாதாரணமானவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள்’ என்றார்.
அதனால்தான் நேற்று இந்தப் பத்தியில் நீதிபதி பதவி விலகியிருந்தாலும்இ நாட்டில் நின்று தனது தீர்ப்பு சரியானது என்பதற்காக
போராடியிருக்க வேண்டும் என்று எழுதியிருந்தேன்…!

-ஊர்க்குருவி.