இப்படியும் நடக்கிறது

0
94

அதிகாலை தொலைபேசி மணி அடித்தது. இந்தவேளையில் ஏதேனும் அவசரம் என்றால்தானே தொலைபேசியில் அழைப்பார்கள் என்ற பதற்றத்தில் அழைப்புக்கு பதிலளித்தேன். நண்பர் ஒருவர்இ காலை வணக்கம் சொல்லிவிட்டுஇ உங்களிடம் ஒரு விளக்கம் கேட்க எடுத்தேன் – என்றார். நேற்று நீண்டநேரமாக தூக்கத்துக்கு போகமுடியாதபடி பல வேலைகள் இருந்ததால் நள்ளிரவை தாண்டிய பின்னரே தூக்கத்துக்கு போயிருந்ததால் அதிகாலை எழும்பியதே ஒரு வகையில் சினத்தைத் தந்தாலும் -அந்த நண்பர் அவசியம் இல்லாமல் எடுக்கமாட்டார் என்பதால்இ என்ன விளக்கம்? என்றேன்.

‘காவாலி- கழிசடை இந்த இரண்டு சொற்களுக்கும் ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா?’ என்று கேட்டார். எனக்கு எதிரிலே அவர் இருந்திருந்தால் என்ன செய்திருப்பேனோ தெரியவில்லை. ஆனா லும்இ வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு சொன்னேன்: ‘இந்த அகாலவேளையில் ஒருவனை எழுப்பி இப்படிக் கேட்பவனை காவாலி என்கிறோம்…’ என்றேன். அவர் பகிடியை விடுங்கஇ சரியான பதிலைச் சொல்லுங்கோ என்றார். எனக்கு அப்போது நித்திரை முழுவதுமாக போய்விட் டது. எழுந்து கட்டிலில் அமர்ந்தவாறு சொன்னேன்: ‘நமது குழந்தை சற்று குழப்படி என்றால்இ செல்லமாக நாம் காவாலி பயல் என்போம்.

அதுவே மற்றவர் குழந்தை குழப்படி செய்தால் கழிசடை என்போம்’ என்றேன். அவர் திருப்திப்பட்டதாகத் தெரியவில்லை. தொடர்பைத் துண்டித்துக் கொண்டோம். பின்னர் இன்று காலை அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த போதுதான் நண்பர் அதிகாலை கேட்ட விடயம் ஏதோ முக்கியமான அலுவலுக்காகக்தான் இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டு அலுவலகத்தில் இருந்த தமிழ் அகராதியை புரட்டினேன்.

காவாலி – மனம்போனபடி நடப்பவன் கழிசடை – கழிக்கப்பட்ட தலைமுடிபோல இழிந்தவன் இப்படித்தான் அகராதி விளக்கம் தந்தது. மீண்டும் அழைப்பெடுத்து நண்பருக்கு கூறவேண்டியதாகிவிட்டது. இனி இன்று எழுதவந்த விட யத்துக்கு வருகின்றேன். நேற்று காலை ஈழநாடு – டான் ரீ. வி. குழுமத்தின் தலைவர் குகநாதனுக்கு தொலைபேசி அழைப்பெடுத்துஇ ‘சுமந்திரன் எம். பி. நாளை ஏற்பாடு செய்திருக்கும் கூட்டத்தில் நீங்களும் பேசுவதாக இருக்கின்றதே. பேசுகிறீர்களா?’ என்று கேட்டேன். அவர் சொன்னார்இ ‘கொழும் பில் இருக்கிறேன். நாளை வந்து விடமுடியுமோ தெரியவில்லை. வந்தால் கட்டாயம் போவோம் என்றுதான் இருந்தேன். ஆனால்இ இனி அதற்கு போவதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன்’ என்றார். எனக்கு புரியவில்லை. ஈழநாடு பத்திரிகையில் விளம்பரமும் தந்திருக்கிறார்கள். உங்கள் பெயரை வழக்கம்போல – அதாவதுஇ நீங்கள் பாவிப்பதுபோல இல்லாமல் நாங்கள் சுமந்திரனின் பெயரை பாவிப்பதுபோல உங்கள் பெயரையும் எழுதியிருக்கிறார்கள்’ என்றேன்.

அதற்கு அவர்இ தனது பெயருடன் அந்த கூட்டத்துக்கான அழைப்பிதழ் நண்பர் ஒருவரிடமிருந்து வந்ததும்இ தான் சுமந்திரனுக்கு அனுப்பிய குறுந்தகவலை எனக்கு அனுப்பியிருந்தார். அது இப்படி இருந்தது: ‘நான் திரும்பத்திரும்ப சொன்னேன். பெயர் போடவேண்டாம். நான் முடிந்தால் கட்டாயம் வருவேன். வந்தால் கட்டாயம் பேசு வேன்’ என்று. நீங்களும் அதனை ஏற்றுக்கொண்டீர்கள். ‘பெயர் போடவில்லை. கட்டாயம் வாருங்கள் – பேசுங்கள்’ என்றீர்கள். ஆனால்இ இப்போது நீங்கள் பெயரை போட்டு துண்டுப் பிரசுரம் வெளியிட்டுள்ளீர்கள். இது எந்த வகையிலும் நியாயமானது அல்ல. நான் இதுபற்றி எழுதி விட்டு நிகழ்ச்சிக்கு வருவதில்லை என்று முடிவெடுக்கவேண்டியது தவிர்க்க முடியாதது.’ எமது நிறுவனத் தலைவர் சுமந்திரனுக்கு அனுப்பிய மேற்படி குறுந்தகவலுக்கு சுமந்திரன் இவ்வாறு பதில் அனுப்பியிருந்தாராம்: ‘சயந்தன் உங்களோடு பேசி இணங்கியதாக சொன்னார்’. அதற்கு இவர் அனுப்பிய பதில்: ‘இப்படியானவர்களை அருகில் வைத்திருப்பதுதான் நீங்கள் செய்கின்ற மிகப் பெரிய தவறு.

தெரியாமல் செய்தால் பரவாயில்லை. நீங்கள் தெரிந்து கொண்டே தவறு செய்வது புரிந்து கொள்ள முடியாதது.’ சயந்தன் அப்படி சொல்லியிருந்தாலும் அவர் சொல்வது சரியா? உங்கள் பெயரை போடுகிறோம் என்று கேட்டிருக்கவேண்டியது சுமந்திரன் போன்ற பொறுப்புள்ளவர்களின் பணி. அவர்தான் மனம்போனபடி நடப்பவர் என்றால்இ தன்னோடு இருப்பவர்கள் எத்தகையவர்கள் என்பதையாவது அவர் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதைவிட கவனத்துக்குரியதுஇ சயந்தன் எமது நிறுவனத் தலைவ ருக்கு அந்த நிகழ்ச்சியின் அழைப் பிதழை அனுப்பியபோது அதன் முதல் பக்கத்தை மாத்திரமே அனுப்பியிருந்தாராம். அதாவதுஇ அவர் பெயர் போடப்பட்ட பகுதியை தவிர்த்தே அனுப்பியிருக்கிறார்.

அவர் பெயரை அவர் சம்மதம் இல்லாமலே போடுகின்றோம் என்பதை தெரிந்துகொண்டே அவர் போட்டிருக்கிறார். இவரை எப்படி அழைக்கலாம்? வாசகர்களி டமே விட்டுவிடுகின்றேன்.

ஊர்க்குருவி.