அவர் ஒரு மூத்த போராளி. தமிழீழத்துக்காக எண்பதுகளின் ஆரம்பத்தில் போராடத் தொடங் கிய ஆயுத இயக்கம் ஒன்றில் தன்னை இணைத்துக்கொண்டு போராடப் புறப்பட்ட ஆயிரக் கணக்கான இளைஞர்களில் அவ ரும் ஒருவர். லண்டனில் வாழும் அவர் தொலைபேசியில் தொடர் பில் வந்தார். வழக்கமாக சொல் லும் வணக்கத்தைக்கூட மறந்தவராக, ‘என்ன இருந்தாலும் முட்டாள் பயலுகள் ஒண்டு சேர்ந்து ஏழு கட்சிகளையும் ஏராளமான பொது அமைப்புகளையும் சேர்த்து ஒரு கட்டமைப்பை உருவாக்கியிருக் கிறது சாதனைதான். இந்தப் பொது வேட்பாளர் விசயம் சரியோ, பிழையோ அதெல்லாம் தேவையில்லாதது.
ஆனால், அந்த ஒரு விசயத்தை வைச்சுக்கொண்டு ஒரு பெரிய கட்டமைப்பை உரு வாக்கினது சாதனைதான்’ என்றார். பொதுவேட்பாளர் விடயத்தில் கடந்த சில மாதங்களாகத் தமது கவனத்தை திருப்பியிருந்தவர்களை பார்த்து ‘கிறேசி பீப்பிள்’ (முட் டாள்கள்) என்று சம்பந்தனும் சுமந்திரனும் சொல்லிக்கொண்டி ருந்தார்கள். அதுதான் அவரும் முட்டாள் பயலுகள் ஒன்றுசேர்ந்து என்று சொன்னார் என்று நினைக்கி றேன். அவர் இவ்வாறு சொன்னதும் என்னையும் சேர்த்துத்தான் முட் டாள் என்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
காரணம் இந்த விவகாரம் பேசுபொருளாகியதிலிருந்து இந்த ஊர்க்குருவியும் அதற்கு ஆதரவாகத்தான் எழுதி வந்திருக் கின்றது. நண்பர் லண்டனிலிருந்து பேசினாலும், வட்ஸ் அப்பில் தொடர்பில் வந்ததால் ஆசுவாச மாக பேசமுடியும் என்பதால் அவரிடம் கேட்டேன்,
‘நேரம் இருக்கிறதா? இருந்தால் ஒரு கதை ஒன்று சொல்லலாம்’ என்றேன். அவரும் சம்மதித்ததால் கதையைச் சொன்னேன். ஒரு முறை நடைபாதையில் லைசன்ஸ் இல்லாமல் வியாபாரம் செய்ததற்காக ஒருவர் பொலிஸாரிடம் மாட்டிக்கொண்டார். அவர் அந்த ஊருக்கு புதிது, அதனால் அங்கு நடைபாதையில் வியாபாரம் செய்ய லைசன்ஸ் தேவை என்பது தெரிந்திருக்க வில்லை. அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் – அங்கு நீதிபதி முன் ஏற்கனவே
பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த மூன்று பெண்களும் நின்று கொண்டிருந்தனர்.
அவர்கள் லைசன்ஸ் இல்லாமல் விபசாரம் செய்ததால் கைது செய்து செய்யப்பட்டிருந் தனர். அந்த நாட்டில் விபச்சாரம் செய்யவும் லைசன்ஸ் வழங்கப்படு கிறது. அவர்கள் அத்தகைய லைசன்ஸ் பெறாமல் தொழிலில் ஈடுபட்டதால் மாட்டிக்கொண்ட னர். நீதிபதி முதல் பெண்ணிடம் கேட்டார் ‘நீ யார், என்ன செய்து கொண்டிருந்தாய்? இந்தக் குற் றத்தை ஒப்புக்கொள்கிறாயா?’
முதல் பெண் ‘நான் ஒரு மொடல், என்னை தவறாக கைது செய்துவிட்டனர்’ என்று பொய் சொன்னாள். நீதிபதி ’30 நாள் கடும் காவல் தண்டனை’ என்று சொல்லிவிட்டு இரண்டாம் பெண்ணை பார்த்து இதே கேள்விகளை கேட்டார். இரண்டாம் பெண் ‘ நான் ஒரு நடிகை! இதற்கும் எனக்கும் சிறி தளவும் சம்மந்தமில்லை’ எனச் சொன்னாள் (பொய்தான்). நீதிபதி ‘உனக்கு 60 நாள் கடும் காவல் தண்டனை’ என்று சொல்லி விட்டு மூன்றாம் பெண்ணை பார்த்து இதே கேள்விகளை கேட்டார்.
மூன்றாம் பெண் ‘ஐயா! நான் ஒரு விபச்சாரி, லைசன்ஸ் பற்றி எனக்கு தெரியாது, எனக்கு வேறு தொழிலும் தெரியாது’ எனச் சொன்னாள். இதைக் கேட்ட நீதிபதி ‘நான் உன்னை பாராட்டுகிறேன். தண் டனை கிடைக்கும் எனத்தெரிந்தும் உண்மையை சொன்னதற்காக! நான் உண்னை விடுதலை செய்கி றேன். அதுமட்டுமல்ல உனக்கு லைசன்ஸ் வழங்கவும் உத்தரவிடுகி றேன்!’ என்று தீர்ப்பு கூறினார். இவற்றை மிக அவதானமாக பார்த்துக்கொண்டிருந்த அந்த நடைபாதை வியாபாரி இப்போது நீதிபதி முன்னர் அழைக்கப்பட் டார். நீதிபதி தனது வழக்கமான கேள்விகளை அவரிடம் கேட்டார். அதற்கு அவர் சொன்னார், ‘ஐயா! நானும் ஒரு விபச்சாரி, லைசன்ஸ் பற்றி எல்லாம் எனக்கு தெரியாது, எனக்கு வேறு தொழிலும் தெரியாது!’. நான் கதையைச் சொல்லி முடிந்ததும் அவர் சிரித்தார்.
அவரிடம் நான் கேட்டேன், அந்த நடைபாதை வியாபாரி, முட்டாளா? அறிவாளியா?
அதற்கு அவர் என்ன பதில் சொன்னார் என்பதை விட்டுவிடுவோம். இந்தக் கதைக்கும் மேலேயுள்ள முட்டாள் பயலுகள் சமாச்சாரத்துக் கும் எந்த சம்பந்தமுமில்லை. ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொதுவேட்பாளரை நிறுத் தும் முயற்சியை முளையிலேயே கிள்ளிவிட பலரும் முயற்சி செய்த னர். அவ்வாறு முயற்சி செய்தவர்க ளில் தெற்கின் வேட்பாளர்கள் மட்டு மல்ல, அவர்களின் முகவர்களும் தான் முக்கியமானவர்கள். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை களம் இறக்குவது என்பது அவர் வெற்றிபெற்று ஜனாதிபதி ஆவதற்காக அல்ல என்பது குழந்தைக்கும் தெரிந்ததுதான்.
ஆனால் இப்போதும் சிலர், தங்களை புத்தி ஜீவிகள் என்று தாங்களே கூறிக் கொண்டும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் வெற்றிபெறமுடி யுமா என்றும் கேட்கிறார்கள். தமிழ் மக்களுக்கு இருந்த ஆயுத பலம் மௌனிக்கப்பட்டுவிட்டது. பாராளுமன்ற பலமும் பல துண்டு களாக பிரிந்துவிட்டது. இனி இருக்கக்கூடியது மக்கள் பலம் மட்டுமே. தமிழ் மக்கள் எல்லோரும் தமது பிரச்னைகளுக்கு தீர்வு காணும் விடயத்தில் ஒற்றுமையாக நிற்கிறார்கள் என்பதை காட்டுவது ஒன்றுதான் நமக்கு இருக்கின்ற பலம். அதனை வெளிக்காட்ட கிடைத்திருக்கின்ற சந்தர்ப்பம்தான் ஜனாதிபதி தேர்தல். அதனை இனி யும் உணராதவர்களைப் பற்றி பேசுவது நமது நேரத்தை வீணடிக்கும் செயல் மாத்திரமே.!
- ஊர்க்குருவி.