இராகலை பொலிஸ் நிலையத்தில் “வேல்ட் விஷன்” சமூக தொண்டு நிறுவன நிதி அனுசரனையின் கீழ் நிர்மானிக்கப்பட்டுள்ள மகளீர் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் வைபவரீதியாக திறப்பு விழா செய்து வைக்கப்பட்டது.
இராகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் முருகையா செல்வகுமார் தலைமையில் இன்று காலை இடம்பெற்ற இந்த திறப்பு விழா நிகழ்வில் மத குருமார்கள், வேல்ட் விஷன் நிறுவனத்தின் இலங்கை அபிவிருத்திக்கான முகாமையாளர் மெலிஸா ஸ்ரேக் (அவுஸ்திரேலியா), நிறுவனத்தின் பிராந்திய அபிவிருத்தி அதிகாரிகளான ரஸ்மிகா மற்றும் கிஸான்,உட்பட நுவரேலியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.பி பஸநாயக்க ஆகியோருடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், அரசாங்க சேவையாளர்கள், வர்த்தகர்கள்,பொதுமக்கள்,என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் பிரதேசமான இராகலை பொலிஸ் நிலையத்தில் மகளிர் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகளை ஏற்று விசாரணைகளை தனியாக மேற்கொள்ள பணியகம் இல்லாத நிலையில் “வேல்ட் விஷன்” நிறுவனத்தின் நிதி உதவி ஊடாக அமைக்கப்பட்டுள்ள இந்த பணியகம் இராாலை பிரதேச மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முருகையா செல்வகுமார் தெரிவித்தார்.