காத்தான்குடி பிரதான வீதியில் பொலிசார் தேசிய அடையாள அட்டையை பரிசோதனை செய்வதுடன் தேசிய அடையாள அட்டை இலக்கத்துக்கு மாறாக வெளியில் செல்வோரின் அடையாள அட்டை இலக்கங்களையும் சட்ட நடவடிக்கைக்காக பதிவு செய்து வருகின்றனர்.
தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்;படையிலேயே அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வெளியில் வருமாறு பொலிஸ் வாகனத்தில் காத்தான்குடி பொலிசார் ஒலி பெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.
இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து தீவிர கண்கானிப்பினை முன்னெடுத்திருத்தனர்.