மடூல்சீமை எலமான் பகுதியில் அமைந்துள்ள சிறிய உலக முடிவு பகுதிக்கு அருகாமையில், பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மது அருந்தி கொண்டிருந்த ஐவர் அடங்கிய குழுவினரில், இருவர் பள்ளத்தாக்கில் வழுக்கி விழுந்து காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று தனது 25 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுவதற்காக மடூல்சீமை எலமான் சிறிய உலக முடிவு பகுதிக்கு அருகாமையில் சானுவ பகுதியில் தனது நணபர்கள் ஐவர் சகிதம் மது அருந்தி கொண்டிருந்த வேளை 25 வயது பிறந்த நாளை கொண்டாடும் நபர் கற்பாறையில் இருந்து வழுக்கி விழுந்துள்ளார்.
அவரை காப்பாற்ற சென்ற மற்றைய நபரும் விழுந்து படுகாயமடைந்த நிலையில் பதுளை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த இருவரும் 25 வயதுடைய பசறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
பதுளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் வைத்திய அதிகாரி பாலித ராஜபகக்சவிடம் வினவிய போது நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் பதுளை வந்ததாகவும் அதில் ஒருவர் படு காயமடைந்த நிவையிலேயே அனுமதிக்கப்பட்டதாகவும் மற்றையவர் சிறு காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாகவும் வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை மடுல்சீமை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.