இருவேறு பிரதேசங்களில் இருவர் துப்பாக்கிகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு பேலியாகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இரண்டுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்
நவகமுவ, ரணால பிரதேசத்தை சேர்ந்த 36 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தலைமையகத்துக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அவரது வீட்டை சோதனை செய்தபோது வெளிநாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, கொழும்பு அவிஸ்ஸாவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலட்டுவாவ பிரதேசத்தில் உள்நாட்டு துப்பாக்கி ஒன்றுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தும்மோதர பிரதேசத்தை சேர்ந்த 39 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.