இருவேறு பிரதேசங்களில் இருவர் வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் கைது

0
141
Gun in the hands of a children on a gray background.

காலி, குருணாகல் ஆகிய மாவட்டங்களின் இருவேறு பிரதேசங்களில் இருவர் வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காலி மிட்டியாகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி, மூன்று தோட்டாக்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கலுப்பே ஹிக்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயது இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, குருணாகல் வாரியபொல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திக்வெஹர பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திக்வெஹெர பிரதேசத்தை சேர்ந்த 37 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த இருவர் தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.