25 C
Colombo
Sunday, October 27, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

இறுதிச் சடங்கில் பங்கேற்கச் சென்ற நபர் விபத்தில் பலி!

மெதகம மொனராகலை வீதியில் பேருந்தும், முச்சக்கரவண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

பகினிகஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய மதுசங்க சமிந்த குமார என்ற நபரே இவ்விபத்தில் உயிரிழந்தார்.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும் படுகாயமடைந்த நிலையில், மெதகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், ஆபத்தான நிலையிலிருந்த ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் தனது மனைவியின் தாயாரின் இறுதிக் கிரியைக்காக அப்பகுதிக்கு வந்துள்ளதாகவும், இறுதிச் சடங்கிற்குத் தேவையான பொருட்கள் சிலவற்றை எடுத்து வருவதற்காக மெதகம நகருக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles