மியன்மார் இலங்கைக்கு 1000 மெட்ரிக் தொன் அரிசியை நன்கொடையாக வழங்கியுள்ளது.
யாங்கூனில் உள்ள வர்த்தக துறைமுகத்தில் இந்த அரிசி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையுடன் நிலவும் நட்புறவையும் ஒத்துழைப்பையும் கருத்தில் கொண்டு இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக மியன்மார் கூறியுள்ளது.
இந்நிகழ்வில் மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜே.எம். பண்டார பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு இந்த அரிசி, உதவி மிகவும் முக்கியமானது என தெரிவித்துள்ளார்.