மற்றுமொரு இலங்கையர் மியன்மாரில் பயங்கரவாதிகளால் சைபர் அடிமை முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவதை காணொளியாக பதிவு செய்து வௌியிட்டுள்ளனர்.
அவர் வௌியிட்ட தகவலுக்கு அமைய, மேலும் 15 பேர் கொண்ட மற்றுமொரு குழு குறித்த முகாமுக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.
சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று அதன் எல்லை வழியாக மியன்மாருக்குள் பிரவேசித்த 25க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அந்நாட்டு பயங்கரவாத அமைப்பினால் சில மாதங்களுக்கு முன்னர் சிறைபிடிக்கப்பட்டனர்.
இந்த குழு மியன்மாரில் உள்ள பயங்கரவாத முகாமில் வலுக்கட்டாயமாக அடைத்து வைக்கப்பட்டு சைபர் அடிமைகளாக பயன்படுத்தப்படுகின்றமை தெரியவந்துள்ளது.