இலங்கையின் பொருளாதார நெருக்கடியை, இந்தியா, சிறந்த பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், இந்தியா, இன நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்காக பாடுபட வேண்டும் எனவும், இந்திய மத்திய வங்கியான ரிசேர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இன நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்காக பாடுபட வேண்டும்.
இது தொடர்பில், இலங்கையின் நிலவரம், சிறந்த பாடமாக அமையும்.
அதுவே, நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கு வலுவாக இருக்கும்.
நடுத்தர வருமானத்தை கொண்டிருந்த இலங்கையில், சிறுபான்மையினரை கையாள்வதில் பிரச்சினைகள் இருந்தன.
இலங்கையில் இருந்த அதிகளான சிறுபான்மையினர் மத்தியில், வேலையில்லா பிரச்சினை எழுந்த போது, அதனை, அரசியல்வாதிகள் கண்டுகொள்ளவில்லை.
அதனை கையாள்வதில் கவனம் செலுத்தவில்லை.
அதனையடுத்தே, அங்கு உள்நாட்டு போர் ஒன்று ஏற்பட்டது.
எனவே, இந்தியா அதனை பாடமாகக்கொண்டு, இந்தியாவில் இன நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்காக பாடுபட வேண்டும்.
இந்தியாவில், 10 வருடங்களுக்கு முன்னர் இருந்த ஜனநாயக பண்புகளில், தற்போது குறைவு ஏற்பட்டுள்ளது.
என இந்திய மத்திய வங்கியான ரிசேர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் சுட்டிக்காட்டியுள்ளார்.