இலங்கையில் கலப்பு தேர்தல் முறை: பிரதமர்

0
191

இலங்கையில் எதிர்காலத்தில் கலப்பு தேர்தல் முறையொன்று அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். கதிர்காமத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போதைய அரசியலமைப்புத் திருத்தப்பட்டு புதிய கலப்புத் தேர்தல் முறையொன்று அறிமுகப்படுத்தப்படும். அத்துடன் உயரிய சபையான நாடாளுமன்றம், உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரங்களும் எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும். இதேவேளை வாழ்க்கை சுமை அதிகரித்துள்ள மக்களின் நலன்புரி விடயங்களுக்காக புதிய யுக்திகள் கையாளப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.