இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்காக இன்னமும் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் பிரிட்டிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து!

0
13

இலங்கையின் யுத்த குற்றவாளிகளிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்தமையை வரவேற்றுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆனால் நீதிக்காக இன்னமும் குறிப்பிடத்தக்க அளவு நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ளது  என தெரிவித்துள்ளனர்.

பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றியவேளை அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர் 

இலங்கையில் மனித உரிமை மீறல்களின் அளவு குறைவடையவில்லை என தெரிவித்துள்ள  ஹரோ மேற்கிற்கான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரெத்தோமஸ் இந்த வருட ஆரம்பத்தில் பிரிட்டிஸ் அரசாங்கம் யுத்த குற்றவாளிகளிற்கு எதிராக தடைகளை விதித்தது, ஆனால் நீதிக்கான இன்னமும் நிறையசெய்யவேண்டியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்

முள்ளிவாய்க்காலின் யுத்தசூன்ய வலயத்தின் மீதான இலங்கை அரசாங்கத்தின் தாக்குதல்களிற்கு எதிர்ப்புதெரிவித்து  2009 ம் ஆண்டு லண்டனில் தமிழ் சமூகம் எவ்வாறு அணிதிரண்டது என்பது எனக்கு நினைவிருக்கின்றது என தெரிவித்துள்ள மிட்சாம் மற்றும் மோர்டனிற்கான நாடாளுமன்ற உறுப்பினர் சிபான் மக்டோனா இலங்கை அதிகாரிகளிற்கு எதிரான  பிரிட்டனின் தடை சிறிய நடவடிக்கை போல தோன்றலாம் ஆனால் அது எதிர்காலத்திற்கான பெரும் நம்பிக்கையை  வழங்குகின்றது என குறிப்பிட்டார்.