இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இந்திய இழுவை படகு ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
11 இந்திய மீனவர்களுடன் கைப்பற்றப்பட்ட இழுவை படகு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை 2024 இல் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 45 இந்திய இழுவை படகுகளையும் 333 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைப்பற்றி சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.